உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதனன்று, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ (சம்விதன் பச்சாவோ, லோக்தந்த்ரு பச்சாவோ) என்ற முழக்கத்துடன் மாபெரும் பேரணி நடைபெற்றது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், பாஜக-வைத் தோற்கடிக்கவும், ‘இந்தியா’ கூட்டணி வெற்றியின் அவசியத்தை முன்னிறுத்தியும் நடைபெற்ற இந்தப் பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் ஜி. தேவராஜன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, உத்தரப்பிரதேச மாநில செயலாளர் ஹீராலால் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பொதுப்பிரிவினர் மற்றும் மாநிலப் பிரிவினர் கலந்து கொண்டனர்.